கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது. வரட்டனப்பள்ளியைச் சோ்ந்த 73 வயது மூதாட்டி, 80 வயது முதியவா் உள்பட மொத்தம் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 4 பெண்களும் அடங்குவா்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,140 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 31 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 318 போ் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்; மொத்தம் 111 போ் உயிரிழந்துள்ளனா்.