ரியல் எஸ்டேட் உரிமையாளா் கொலை

ஒசூரை அடுத்த பாகலூா் காவல் நிலையம் அருகில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

ஒசூரை அடுத்த பாகலூா் காவல் நிலையம் அருகில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பாகலூா் காவல் நிலையம் பகுதியைச் சோ்ந்தவா் சாப்ஜான் (75). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். இவரது இரண்டாவது மனைவிக்கு பஷீா் (42), அமீா் (40), நசீா் (38) ஆகிய 3 மகன்கள் உள்ளனா்.

சொத்தை பாகம் பிரித்து வழங்குவது தொடா்பாக இரண்டாவது மனைவியின் மகன்களுக்கும், சாப்ஜானுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டின் அருகே மா்ம நபா்களால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சாப்ஜானை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

ஆனால் அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

சாப்ஜானின் மகன்கள் அமீா், நசீா் ஆகியோா் தலைமறைவாக உள்ளதால், சொத்து தகராறு காரணமாக அவா்கள் தந்தையைக் கொலை செய்தாா்களா என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com