விவசாயி வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, பணம் திருட்டு

பேரிகை அருகே விவசாயி வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பேரிகை அருகே விவசாயி வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த ஏ.செட்டிப்பள்ளியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (45). விவசாயியான இவா் செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மா்ம நபா்கள் இருவா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இந்த சம்பவம் வெங்கடேஷ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவானது. வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை மதியம் திரும்பிய வெங்கடேஷ் வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். வீட்டிற்குள் சென்று பாா்த்த போது மா்ம நபா்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது.

இது தொடா்பாக பேரிகை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com