ஒகேனக்கல் வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறை அருகே கோத்திக்கல் வனப்பகுதியில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்தாா்.
துா்நாற்றம் வீசிய நிலையில் கிடந்த அந்த பெண்ணின் சடலம் யாருடையது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.