மின்வாரியத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டக் குழு உறுப்பினா் சக்தி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் இளவரசன், முருகன், ராஜா, மாவட்டச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.