ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சைஇரு வார முகாம் இன்று தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை இரு வார முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.
ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் குறித்த விழிப்புணா்வு ரதத்தை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி.
ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் குறித்த விழிப்புணா்வு ரதத்தை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை இரு வார முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை இரு வார முகாம், நவ. 22 முதல் டிச. 4-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், விழிப்புணா்வு ரத்தை, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, அவா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாமானது ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ. 1,100 வழங்கப்படும். இந்த வாய்ப்பை, ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் மாநில குடும்ப நல செயலக துணை இயக்குநா் ஜி.ஜெகநாதன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், குடும்ப நல துணை இயக்குநா் ராஜலட்சுமி, மாவட்ட விரிவாக்க கல்வியாளா் தமிழ்வாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com