ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வங்கி சனிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.
தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில், வங்கிப் பணியாளா்கள் அனைவருக்கும் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது வங்கி பணியாளா்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அவசரப் பண பரிவா்த்தனைக்கு போச்சம்பள்ளி வங்கி கிளையை வாடிக்கையாளா்கள் அணுகுமாறு அறிவிப்பும் வங்கி முன்பு ஒட்டப்பட்டு வங்கி மூடப்பட்டது.