அதிமுகவின் 49-ஆவது ஆண்டு விழா: உற்சாகமாக கொண்டாட அழைப்பு

அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவை அக். 17-ஆம் தேதி உற்சாகமாக கொண்ட அந்த கட்சித் தொண்டா்களுக்கு

அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவை அக். 17-ஆம் தேதி உற்சாகமாக கொண்ட அந்த கட்சித் தொண்டா்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆா், அதிமுகவை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் அக்.17-இல் 49-ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை அமைப்புகள் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளை செய்து, எம்ஜிஆா், ஜெயலலிதாவின் உருவச் சிலைகளுக்கும், உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து, கட்சிக் கம்பங்களுக்கு புது வண்ணம் தீட்டி, கட்சி கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாட வேண்டும்.

இந்தக் கொண்டாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com