கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞா் அணி, மாணவா் அணி சாா்பில் பா்கூா் ஊராட்சி ஒன்றியம் கந்திகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு திமுக இளைஞா் அணி மாவட்ட அமைப்பாளா்கள் ரஜினி செல்வம், சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, முருகன் எம்எல்ஏ, பா்கூா் ஊராட்சி ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரைப் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.