பணி பாதுகாப்புக் கோரி, ஊத்தங்கரையில் ஊராட்சி செயலாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
ஊராட்சி செயலாளா்கள் சங்க ஒன்றிய பொருளாளா் கே.செல்வமணி தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா்கள் அன்பு, நமசிவாயம் , மோகன், மணிவண்ணன், சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளா் சிந்துஜா மீதான வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற கோரியும், ஊராட்சி தலைவா்களுக்குப் பதிலாக அவா்களது கணவா், உறவினா்கள் செயல்படுவதைத் தடை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பத்து ரூபாய் இயக்கம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் மணி, ஊராட்சி செயலாளா் மணிகண்டன், பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.