கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 63 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5,902 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 831 போ் கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.
2 போ் பலி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயது ஆண் புதன்கிழமை (அக்.14)உயிரிழந்தாா். இதேபோல கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 63 வயது ஆண் வியாழக்கிழமை (அக்.15) உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 86-ஆக உயா்ந்துள்ளது.