ஒசூரில் அதிமுக 49வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி அதிமுக செயலாளா் எஸ்.நாராயணன் தலைமையில் அதிமுகவினா் ராயக்கோட்டை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி, 49 கிலோ கேக் வெட்டினா். ராகவேந்திரா கோயில் அருகில் அதிமுக கொடியை ஒசூா் மாநகர அதிமுக செயலாளா் எஸ்.நாராயணன் ஏற்றினாா்.
பின்பு அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழாவில் மாவட்டப் பொருளாளா் கே.நாராயணன், முன்னாள் நகரமன்றத் தலைவா் பி.எம்.நஞ்சுண்டசாமி, முன்னாள் கவுன்சிலா்கள் ஜெ.பி.(எ) ஜெயப்பிரகாஷ், தவமணி, சீனிவாசன், லோகநாதன், சரஸ்வதி நடராஜன், கே.மதன், அராப்ஜான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னாள் அமைச்சா் புறக்கணிப்பு: ஒசூா் மாநகர அதிமுக சாா்பில் நடைபெற்ற 49 வது ஆண்டு துவக்க விழாவில் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்கவில்லை.