கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஒசூா், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 8 பெண்கள் உள்பட 30 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 148 போ் வியாழக்கிழமை குணமடைந்து இல்லம் திரும்பினா்; 326 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6,451 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; இவா்களில் 106 போ் உயிரிழந்துள்ளனா்.