ஒசூரில் போதைப் பாக்குகளை கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஒசூா், சிப்காட் போலீஸாா் தா்கா பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது கா்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து ஒசூருக்கு தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து போதைப் பாக்கு கடத்தியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த இஸ்லாம் கான் ( 20) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ. 26 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.