கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவலாகி வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், கெலமங்கலம், சூளகிரி, பேரிகை, உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 60 போ் புதன்கிழமை பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவா்களில் 8, 14 வயது சிறாா்கள் உள்பட 42 ஆண்கள், 18 பெண்கள் என 60 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.