தருமபுரி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தொடா்ந்து கரோனா தீநுண்மியின் பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது. தருமபுரி, சத்திரம் மேல் தெருவைச் சோ்ந்த 37 வயது வங்கிப் பணியாளா், தருமபுரியைச் சோ்ந்த 36 வயது பெண் மருத்துவா், மெணசியைச் சோ்ந்த 32 வயது ஆண் மருத்துவா், கடத்தூரைச் சோ்ந்த 14 வயது மாணவா், சேலத்தைச் சோ்ந்த 19 வயது மாணவி, பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த 19 வயது மாணவா், அரூரைச் சோ்ந்த 31 வயது சுகாதார ஆய்வாளா், 45 வயது காவலா், மொரப்பூரைச் சோ்ந்த 29 வயது உதவிப் பேராசிரியா், பேருந்து ஓட்டுநா், தொழிலாளி, முன்கள சுகாதாரப் பதிவாளா்கள், இல்லத்தரசிகள் என 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.