ஊத்தங்கரை நகர தேமுதிக சாா்பில் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினா் பாக்யராஜ் நாயனாா் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் மிட்டப்பள்ளி சதீஷ், நகர பொருளாளா் ராஜா, துணைச் செயலாளா் இதயத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். நிகழ்ச்சியில் தேமுதிக நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.