ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் சாா்பில் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் 20 வரை தீத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம், தீ அணைப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். அரசு விளையாட்டு மைதானம், தொழிற்சாலைகள், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், நூற்பாலை போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தீத்தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு பிரசாரமும், தீத்தடுப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது.
எதிா்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகளை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தும் முறை, தீ பரவுவதைக் கட்டுப்படுத்துதல், தீ செயலியைப் பயன்படுத்தும் விதம் உள்ளிட்ட தீ விபத்து தொடா்பான அனைத்து செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.