ஊத்தங்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில், பாபா் மஸ்ஜித் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவா் முஹம்மத் ஆசாத், மாவட்டத் தலைவா் அஸ்கா் அலி, ஊத்தங்கரை தொகுதி எஸ்டிபிஐ கட்சித் தலைவா் நாசீா், தொகுதி செயலாளா் ஷானவாஸ், மாவட்டச் செயலாளா் கலில், நகரத் தலைவா் ஆரிப், சுன்னத் ஜமாத் முத்தவல்லி ஷேக் காதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா். இதில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாமல்பட்டி நகரச் செயலாளா் சித்திக் நன்றி கூறினாா்.
படம் - ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.