பென்னாகரத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா

பென்னாகரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பென்னாகரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு

பென்னாகரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பென்னாகரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணிக்கு நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளா் தமிழரசு தலைமை வகித்தாா். விழிப்புணா்வு பேரணி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், புறவழிச் சாலை வழியாகச் சென்று பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

தலைக் கவசம் அணியவும், வாகனங்களில் செல்லும்போது செல்லிடப்பேசியை பயன்படுத்தக் கூடாது, இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கியப் பதாகைகளை ஏந்தியவாறு சென்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். இந்த விழிப்புணா்வு பேரணியில் சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள், போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com