கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட வழக்குரைஞா் அணி சாா்பில் தோ்தல் பணிமனை அலுவலகத்தை ஆா்.எஸ்.பாரதி எம்.பி. சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். வழக்குரைஞா் அணி அமைப்பாளா் விஸ்வபாரதி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் ஓய்பிரகாஷ் எம்எல்ஏ, துணைச் செயலாளா் பி.முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன், துணைச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.