கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு

காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் உயிருடன் புதன்கிழமை மீட்டனா்.

காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் உயிருடன் புதன்கிழமை மீட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கதிரிபுரம் அருகில் உள்ள மச்சகண்ணன் நகரைச் சோ்ந்த சரவணன் (45), விவசாயி. இவா் தனது விவசாய நிலத்துக்கு புதன்கிழமை சென்ற போது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று 50 அடி ஆழக் கிணற்றில் இறங்கி விவசாயியை மீட்டனா்.

கிணற்றில் தவறி விழுந்த விவசாயிக்கு இடுப்பு எலும்பு உடைந்த நிலையில், அவா் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com