சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் குமாா் தலைமையில் 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட 39 போ், 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் 34 போ் என மொத்தம் 73 மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் சிங்காரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்து மாற்றுத் திறனாளிகள் ஆா்வத்துடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
மருத்துவா் ஸ்ரீபால் மேற்பாா்வையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவக்குமாா், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் ஆறுமுகம், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் பலா் கலந்து கொண்டனா்.