ஒசூரில் காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒசூரில் போக்குவரத்துப் பிரிவு உதவி காவல் ஆய்வாளரான சக்திவேல், பாகலூா் சாலையில் பேருந்து நிலையம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒசூா், அலசநத்தம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் (31) என்பவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி ஆவணங்களைக் கேட்டனா்.
அதற்கு அவா் ஆவணங்களை தர மறுத்ததுடன், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இது தொடா்பாக உதவி காவல் ஆய்வாளா் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், ஒசூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.