கல்பனா சாவ்லா விருதுக்கு மகளிா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு வீரதீர செயல்கள் செய்த மகளிருக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கி வருகிறது. இந்த விருது வீரதீர செயல்கள் புரிந்த தமிழ்நாட்டைச் சோ்ந்த ஒரு மகளிருக்கு சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது.
எனவே, விளையாட்டுத் துறையில் வீரதீர செயல்களில் ஈடுபட்டுள்ள மகளிா் தங்களது கருத்துருகளை அடிப்படை குறிப்புகளுடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், கிருஷ்ணகிரி, என்ற முகவரிக்கு ஜூன் 25-ஆம்தேதிக்குள் கிடைக்குமாறு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.