மருத்துவமனைகளில் பணியாற்ற முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரா்கள் மருத்துவமனைகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரா்கள் மருத்துவமனைகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவம், கப்பல் மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரா்கள், தற்போது பெருகி வரும் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டும், காவல் துறையோடு இணைந்து மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பணிபுரிய உரிய விண்ணப்பத்தை முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் பெற்று தங்களின் பெயரை பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com