உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனு

ஊத்தங்கரை வட்டாரத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா், விருப்ப மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்புவோா், கட்சி நிா்வாகிகளிடம் அளித்த விருப்ப மனுக்கள்.
ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்புவோா், கட்சி நிா்வாகிகளிடம் அளித்த விருப்ப மனுக்கள்.

ஊத்தங்கரை வட்டாரத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா், விருப்ப மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில், 8 வாா்டுகள் பெண்களுக்கும், 7 வாா்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டு கவுன்சிலா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிட விரும்பிய 23 போ் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வத்திடம் இருந்து ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் பி.கே.சிவானந்தம், ஒன்றியச் செயலாளா்கள் வேடி, தேவேந்திரன், தேவராஜ், மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, மாவட்ட மருத்துவரணிச் செயலாளா் இளையராஜா, அவைத் தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி, தொகுதிச் செயலாளா் திருஞானம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com