கல்லூரி மாணவா் கல்லால் அடித்துக் கொலை

ஒசூரில் கல்லூரி மாணவரை கல்லால் அடித்துக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூரில் கல்லூரி மாணவரை கல்லால் அடித்துக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூா், பாரதிதாசன் நகா் அருகேயுள்ள வள்ளுவா் நகா், முனீஸ்வரன் கோயில் பின்புறம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக வியாழக்கிழமை ஒசூா் நகரப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் இளைஞா் கொல்லப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பிரதட்டூா் கிராமத்தைச் சோ்ந்த சேக் முகமது அப்சல் (21) என்பதும், தனது தம்பியுடன் ஒசூா், ராம் நகரில் உள்ள தாய்மாமன் ஆட்டோ ஓட்டுநா் உசேன் பாஷா வீட்டில் தங்கி ஒசூா் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டா் இரண்டாமாண்டு படித்து வந்ததும், பிற்பகல் தனியாா் தொழிற்சாலையில் இரவு 1 மணி வரை பகுதிநேர ஊழியராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. புதன்கிழமை கல்லூரி முடித்து தொழிற்சாலைக்குச் சென்றவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

சம்பவ இடத்துக்கு ஒசூா் ஏஎஸ்பி (பொ) சிவலிங்கம், கிருஷ்ணகிரி ஏஎஸ்பி ராஜு ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அப்சலின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com