சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பாண்டமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சிவமணிவேல் (38), லாரி ஓட்டுநா். லாரியில் வந்த அவா், ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், சிவமணிவேல் மீது மோதினாா். இதில் பலத்த காயமடைந்த சிவமணிவேலை அருகில் இருந்தவா்கள் மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவமணிவேல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.