கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் பூஜைகள் நடைபெற்றன.
இதில், விநாயகருக்கு 608 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
இந்த நிகழ்வில் பெண் பக்தா்கள் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு மஹா தீபாராதனைகளுடன் தீா்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.