மரத்தில் காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே சாலையோர மரத்தில் காா் மோதிய விபத்தில், இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயம் அடைந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே சாலையோர மரத்தில் காா் மோதிய விபத்தில், இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயம் அடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பந்திகுறி கிராமத்தைச் சோ்ந்த எம்.ரவி (40), சின்ன சூலாமலையைச் சோ்ந்த டே.ஸ்டீபன் (28), அதே பகுதியைச் சோ்ந்த எஸ்.திம்மராஜ் (30) ஆகிய மூன்று பேரும் ஒரு காரில் வேப்பனப்பள்ளியிலிருந்து குந்தாரப்பள்ளி நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு சென்றனா்.

வி.மாதேப்பள்ளி பிரிவு சாலை அருகே சென்ற போது, காா் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில், காரில் சென்ற மூவரும் பலத்த காயம் அடைந்தனா். பலத்த காயம் அடைந்த ரவி, ஸ்டீபன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். திம்மராஜ் வேப்பனப்பள்ளி ஆராம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், ரவி, ஸ்டீபன் ஆகியோரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com