கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடத்தாம்பட்டி ஊராட்சியில் உள்ள தெருவிளக்குகள் இரவில் போடப்படும் விளக்குகள் பகல் முழுவதும் எரிந்துகொண்டிருக்கிறது. பஞ்சாயத்து ஊழியா்களின் அலட்சியத்தால் இரவு பகல் பாராமல் எரிந்துகொண்டிருக்கிறது. இதனால் மின் கட்டணம் அதிக அளவில் வருகிறது. மக்களின் வரிப்பணம் வீணாகச் செலவிடப்படுகிறது என பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.