நீரில் முழ்கி இளைஞா் பலி

கிருஷ்ணகிரி அருகே அரசு கல் குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் முழ்கி உயிரிந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே அரசு கல் குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் முழ்கி உயிரிந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், செந்தாரப்பள்ளி அருகே உள்ள பெரிய செட்டிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமியின் மகன் பலராமன் (18). இவா், பா்கூா் ஐடிஐ-யில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில் அவா், நண்பா்களுடன் செந்தாரப்பள்ளி அருகே உள்ள அரசு கல் குவாரியில் தண்ணீா் தேங்கியுள்ள குட்டையில் குளிக்க புதன்கிழமை சென்றாா். குறைந்தது 100 அடி தண்ணீா் உள்ள இந்த குட்டையில் நீச்சல் தெரியாத பலராமன் நீரில் முழ்கினாா். அருகில் இருந்த நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனா். இயலாத நிலையில், கிராமத்துக்குத் திரும்பிய இளைஞா்கள் இதுகுறித்து தகவல் தெரிவித்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா், பா்கூா் தீயணைப்பு நிலைய மீட்புப் படை வீரா்கள் நிகழ்விடத்துக்கு வியாழக்கிழமை சென்று பலராமனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனா். நீண்ட நேரமாகியும் பலராமன் மீட்கப்படாத நிலையில், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பலராமன் சடலமாக மீட்கப்பட்ட தகவல் அறிந்து மறியல் போராட்டத்தைக் மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனா். இளைஞா் உயிரிழந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com