கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், கபசுர குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், நோய் எதிா்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீா் கவா்னா் தோப்பு பகுதியில் வழங்கப்பட்டது (படம்). இதில், நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில் கபசுர குடிநீா், முகக் கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் தீயணைப்புப் படை வீரா்கள் கலந்துகொண்டனா்.