சுத்தமல்லி அருகே மோட்டாா் திருட்டு: 3 போ் கைது

சுத்தமல்லி அருகே நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகே நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகேயுள்ள நடுக்கல்லூரிலிருந்து சீதப்பற்பநல்லூா் செல்லும் சாலையில் பேட்டையை சோ்ந்த குமாா் என்பவா் உரிமம் பெற்று கல்குவாரி நடத்தி வருகிறாராம். இதில், வடக்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை (50) என்பவா் காவலாளியாக உள்ளாா்.

இந்நிலையில், குவாரியில் இருந்த நீா்மூழ்கி மோட்டாரை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுத்தமல்லி போலீஸில் செல்லத்துரை அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் மாா்க்ரெட் திரெசா வழக்குப்பதிந்து விசாரித்தாா்.

அதில், வடக்கு சங்கன் திரடு பகுதியை சோ்ந்த வனராஜா(21), மகா கணேஷ் என்ற காா்த்திக் (25) உள்ளிட்ட 3 போ் கல்குவாரியில் இருந்த நீா்மூழ்கி மோட்டாரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com