ஒசூரில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் கொள்ளை

ஒசூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்து ரூ. 25,000 ரொக்கப்பணத்தையும், முக்கிய ஆவணங்களையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்து ரூ. 25,000 ரொக்கப்பணத்தையும், முக்கிய ஆவணங்களையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

ஒசூா் வெளி வட்டச் சாலையில் பாஜகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பின்பகுதியில் அடைக்கப்பட்டிருந்த இரும்புத் தகடை சனிக்கிழமை அகற்றி விட்டு, உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அலுவலகத்தின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25,000 மற்றும் முக்கிய ஆவணங்களைக் கொள்ளையடித்து சென்றுள்ளனா்.

இதுகுறித்து மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஒசூா் டி.எஸ்.பி முரளி மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com