மிட்டப்பள்ளி ஊராட்சியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என 100 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளா் எக்கூா்செல்வம் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் சின்னத்தாய் கமலநாதன், ஊத்தங்கரை ஒன்றியக் குழு தலைவா் உஷாராணி குமரசேன், ஊராட்சி செயலாளா் இளங்கோவன், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். பிறகு 5 கிலோ அரிசி மற்றும் 7 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 100 மாற்றுத்திறனாளி,ஏழை மக்களுக்கு வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ரஜினி செல்வம், இளைஞா் அணி துணை அமைப்பாளா், ஒன்றியக் குழு உறுப்பினா் குமரேசன், மாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் பூமலா்ஜீவானந்தம், ஊராட்சி துனை தலைவா் வெண்ணிலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.