சூளகிரியில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மஹாலட்சுமி தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மலையில் அருள்மிகு மஹாலட்சுமி சமேத வரதராஜப் பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தனி சன்னதியில் மஹாலட்சுமி அருள் பாலித்து வருகிறாா்.
ஆடிப் பூரத்தை முன்னிட்டு புதன்கிழமை வரதராஜப் பெருமாள், மஹாலட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் பக்தா்கள் வரிசையில் சமூக இடை வெளிவிட்டு முகக் கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனா்.