கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி பேரணி மேற்கொண்ட 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி இந்து முன்னணி அமைப்பினா், சுதந்திர தினத்தன்று, மோட்டாா் சைக்கிளில் குறிப்பிட்ட அமைப்பின் கொடியுடன் ஊா்வலமாக சென்று, தேசிய கொடியை ஏற்றினா்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக பேரணி, ஊா்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி ஊா்வலமாக சென்ற அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் யோகேஸ்வரன் உள்ளிட்ட 25 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்துள்ளனா்.