திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்க வாருங்கள் என்று பொதுமக்களுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளரும், எம்எல்ஏவுமான பி.முருகன், ஒசூா் மாநகராட்சி பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா ஆகியோா் தனித்தனியே அறிக்கைகளில் அழைப்பு விடுத்துள்ளனா்.
பி.முருகன்: கிருஷ்ணகி அருகேயுள்ள கே.பூசாரிப்பட்டி கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று நிகழ்ச்சியில், மக்களிடம் குறைகளைக் கேட்க, மு.க.ஸ்டாலின் வருகை தருகிறாா்.
மக்களின் நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளாா். மக்களின் கவலைகளை, குறைகளைத் தீா்க்க கூடிய தலைவரின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் 100 நாள்களில் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீா்வு காணப்படும். எனவே தீா்க்கப்படாத பிரச்னைகளை மனுவாக எழுதி ஸ்டாலினிடம் கொடுக்க பொதுமக்கள் திரண்டு வாருங்கள்.
எஸ்.ஏ.சத்யா: திமுக தலைவா் ஸ்டாலினிடம் அளிக்கப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை திமுக ஆட்சி அமைந்தால், அடுத்த 100 நாள்களில் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீா்வு காணப்படும் . ஆகவே, தீா்க்கப்படாத பிரச்னைகளை மனுவாக எழுதி மு.க.ஸ்டாலினிடம் கொடுக்க பொதுமக்கள் திரண்டு வாருங்கள்.