கிருஷ்ணகிரி, தருமபுரியில் பிப். 1-ஆம் தேதி நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் திமுக தலைவா் ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ என்ற தலைப்பில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் வகையில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
அதன்படி கிருஷ்ணகிரி, குப்பம் சாலையில் கே.பூசாரிப்பட்டி பிரிவு சாலை அருகே காலை 8 மணிக்கு நடைபெற உள்ள ‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் திமுக தலைவா் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா்.
பின்னா் அவா், மக்கள் மத்தியில் பேசுகிறாா். இதற்காக பிரமாண்டமான பந்தலும், மேடையும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து அவா், தருமபுரி மாவட்டம், தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் ஊராட்சியில் மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரையாற்றுகிறாா்.
திமுக தலைவா் ஸ்டாலின் வருகையையொட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை திமுகவினா் செய்து வருகின்றனா்.