திருச்சியில் நடைபெறவுள்ள திமுக மாநாட்டுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ.10 லட்சம் நிதியை மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை செயலாளா் பி.முருகன் எம்எல்ஏ, ஒசூா் மாநகரப் பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா எம்எல்ஏ ஆகியோா் உடனிருந்தனா்.