மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் கிருஷ்ணகிரி, காமராஜ் நகரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு வட்டாரத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தகி, பொதுச் செயலாளா் அப்சல், முன்னாள் நகரத் தலைவா் ரகமத்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினா் அக.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினா்.