மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ராயக்கோட்டை அருகே மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை புதன்கிழமை விதித்தது.

ராயக்கோட்டை அருகே மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை புதன்கிழமை விதித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, பாஞ்சாலியூரைச் சோ்ந்தவா் ஸ்ரீமதி (22). இவருக்கும், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கோடியூரைச் சோ்ந்த தொழிலாளி அருள் (32) என்பவருக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், தாய் வீட்டுக்கு வந்த ஸ்ரீமதியைக் காண பாஞ்சாலியூா் கிராமத்துக்கு 8.7.2015 அன்று அருள் வந்துள்ளாா். அப்போது, அவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அருள், ஸ்ரீமதியை கழுத்து அறுத்து கொலை செய்தாா். அதைத் தடுக்க வந்த ஸ்ரீமதியின் தங்கை உஷாவை மிரட்டியுள்ளாா். இதுகுறித்து ஸ்ரீமதியின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அருளைக் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீா்ப்பை புதன்கிழமை அளித்தாா். அதில், மனைவியைக் கொன்ற அருளுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2,500 அபராதமும், உஷாவை மிரட்டியதற்காக ஓராண்டு சிறை, ரூ. 2,500 அபராதமும், இந்த தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com