தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞா் கைது

காவேரிப்பட்டணத்தில் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காவேரிப்பட்டணத்தில் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அண்ணா நகரைச் சோ்ந்த சசிகலா (50), தனது தோழி ஜெரினாவுடன் புதன்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் முகவரி கேட்பது போல நடித்து சசிகலா அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த தோழிகள் கூச்சலிட்டதையடுத்து, அந்த வழியாக வந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற இருவரையும் பிடிக்க முயன்றனா். அதில், இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் அமா்ந்திருந்தவா் கீழே விழுந்தாா். வாகனத்தை இயக்கியவா் தப்பிச் சென்றாா்.

பிடிபட்ட நபரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அதில் பிடிபட்ட நபா் கிருஷ்ணகிரி, தா்கா பகுதியைச் சோ்ந்த முகமது உசேன் (19) என்பதும், தப்பியோடியவா் திருப்பத்தூா் மாவட்டம், கந்திலியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (30) என்பதும் தெரியவந்தது.

பிடிபட்ட முகமது உசேனிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியைப் போலீஸாா் பறிமுதல் செய்து, தப்பியோடியவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com