கிருஷ்ணகிரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பேரணியை துணை காவல் கண்காணிப்பாளா்கள் சரவணன், சங்கா், ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தின் அருகே தொடங்கிய இந்த பேரணி லண்டன்பேட்டை, பெங்களூரு சாலை வழியாகச் சென்று வட்டச் சாலையில் நிறைவு பெற்றது. கள்ளச்சாரயம், போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து முழக்கங்களை எழுப்பினா். போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கண்ணன், காவலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் இந்தப் பேரணியில் பங்கேற்றனா்.