கிருஷ்ணகிரியை அடுத்த தொன்னைகான் கொட்டாய் கிராமத்தில் ரூ. 49.50 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொன்னைகான் கொட்டாய் கிராமத்திலிருந்து சவுளூா் பெத்தனப்பள்ளி வரையில் ரூ. 49.50 லட்சம் மதிப்பில் புதிய தாா் சாலை அமைப்பதற்கான பணி தொடங்கியது. இந்தப் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் அம்சாராஜன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆஜி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.