பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தனியாா் வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தனியாா் வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம் அருகே கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்திந்திய தனியாா் வாகன ஓட்டுநா் மற்றும் நடத்துநா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். மாநில நிறுவனத் தலைவா் குணசேகரன், மேற்கு மாவட்ட செயலாளா் தஸ்தகீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப் பெறக் கோரியும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com