கிருஷ்ணகிரியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி அண்மையில் நடைபெற்றது.
சென்னை சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் வளா்ச்சி மையம், கிருஷ்ணகிரி சிட்கோ மற்றும் அச்சுக் குழுமம் ஆகியன இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் பிரசன்னா, இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் திருப்பதி, கிளை மேலாளா் யசோதணன், அச்சுக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்தும், இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள், தொழிற்பேட்டையை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டன. வேப்பனஅள்ளி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த அச்சக உரிமையாளா்கள் பங்கேற்றனா்.