ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் திருத்தோ் வீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது. ராமன், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயா் திருத்தோ் வீதி உலா வந்தனா்.
கோயிலில் தொடங்கி கச்சேரி தெரு, பழைய கடைவீதி, செங்குந்தா் தெரு, அரசமரம் வீதி, கிருஷ்ணகிரி முக்கிய சாலை ஆகிய வீதிகள் வழியாக உலா வந்தனா். நிகழ்ச்சியில் அா்ச்சகா் சுப்பு ஐயா், கஜேந்திரன், சிவா, குமாா், உதயசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.